31ம் நாள் நினைவு அஞ்சலிக் கூட்டமும் ஆத்மா சாந்தி பிரார்த்தனையும்.
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் முக்கிய ஸ்தாபகர்களில் ஒருவரும், சங்கத்தின் கடந்த கால தலைவர், செயலாளரும், மற்றும் சங்கத்தின் கடந்த 23வருட கால வளர்ச்சியில் தனது இறுதி மூச்சுவரை அயராது உழைத்தவருமான அமரர் Dr .சபாபதி சபாரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவு அஞ்சலிக் கூட்டமும் ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் நடைபெறவுள்ளது.
காலம் : 21/04/2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10:30மணி முதல் 14:00 மணி வரை
இடம் : ROSE HOUSE , KINGSBURY WORKS (off Barningam Way ), KINGSBURY , LONDON NW9 8UP .
அனைவரையும் அன்னாரின் ஆத்ம சாந்திக் கூட்டத்திலும் , பின்னர் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு கசிந்துருகி அழைக்கின்றனர் பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கதினர்.
தொடர்புகளுக்கு :
குமார் : 07951 950 843,
ஞானா : 07905 503527,
நாதன் : 07944 232014.
நன்றி
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் .
காரை மண்ணின் பிதாமகனுக்கோர் கண்ணீர் அஞ்சலி
காரை மண்ணின் பிதாமகனுக்கோர் கண்ணீர் அஞ்சலி
புலம்பெயர் காரை அமைப்பின் ஆரம்ப நிறுவுனர்களில் ஒருவரான கலாநிதி சபாபதி சபாரட்ணம் அவர்களின் மறைவு குறித்து பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தின் கண்ணீர் அஞ்சலிப் பூக்கள்.
மேற்குலகிற்கான எம் புலம்பெயர் வாழ்வில், எமது தாய்க் கிராமமான காரைநகர் மண்ணின் வளர்ச்சி குறித்துச் சிந்தித்த மாமனிதரின் பேரிழப்பு இதுவாகும். 1980 களின் பின்னரான புலப்பெயர்வில் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்ட மூத்த சங்கமான இலண்டன் காரை நலன்புரிச் சங்கத்தை நிறுவியவர்களில் முக்கியமானவர் சபா அண்ணா. இச்சங்கம் 1990ஆம் ஆண்டு மேமாதம் தோற்றுவிக்கப்பட்டது. சங்கத்தின் ஸ்தாபகத் தலைவராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளாக அதன் செல்திசையை தோற்றுவித்தவர். அடுத்த வந்த 20 ஆண்டுகளாக அதன் செயலாளராக எம் சங்கத்தைச் செயற்படுத்திய பெருமகன். தன் இறுதிநாள்வரை காரைநகரின் வளர்ச்சிக்காக உள்ளன்போடு செயற்பட்டவர். காரைநலன்புரிச் சங்கத்தின் தோற்றம் முதல் கடந்த 23 ஆண்டுகளாக அதன் செயற்பாடுகள் அனைத்தையும் நெறிப்படுத்திய பெருமைக்குரியவர். அவரின் நேர்மையும் கண்ணியமும் அளப்பரிய சகிப்புத்தன்மையும் என்றென்றும் போற்றுதற்குரியவை. கால் நூற்றாணடை அண்மிக்கும் பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தின் சாதனைகளாக கருதப்பட்டவை அனைத்தும் அவரின் எண்ணக் கருவூலத்தில் தோற்றம் பெற்றவை. அஞ்சலிகள் தெரிவிக்கும் இன்றைய நாளில் அவரின் செயற்திட்டங்களில் முக்கியமானவையாய் கருதப்படும் மூன்றினை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.
முதன்மையானதும் முக்கியமானதும் காரைநகருக்கான நன்னீர் வழங்கல் செயற்திட்டம். இலண்டன் காரை மக்களின் நிதிப் பங்களிப்போடு 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை செயற்படும் இத்திட்டம் சபா அண்ணாவின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் செயலாற்றுமையிலும் முன்னெடுக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு யூன் மாதம் நன்னீர் விநியோக கொள்கலன் இலண்டனிலிருந்து காரைநகருக்கு அனுப்பப்பட்டதன் மூலம் இச்செயற் திட்டம் ஒழுங்கு முறையாக நடத்தப்படுவதற்கான மூலகாரணியாய் இருந்தவர் சபா அண்ணா!
காரைநகரில் வாழும் மக்களின் சுகாதார நலன் குறித்த அத்தியாவசிய மருத்துவ செயற் திட்டங்களில் சபா அண்ணா ஓர் வழிகாட்டியாய் திகழ்ந்தவர். காரைநகர் எல்லைக்கு அப்பால் யாழ் போதனா வைத்தியசாலைக்கான இருதய நோய் மருத்துவ செயற்பாடுகளுக்கு எமது சங்கத்தின் சார்பாக நிதி உதவிகளை வழங்குவதற்கு எம்மை ஊக்கிவித்த புரவலர் சபா அண்ணா. காரைநகர் வைத்தியசாலையின் தேவைக்கேற்ப மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தன் தனிப்பட்ட தொடர்புகளின் மூலம் செயற்படுத்தியவர்.
காரைநகர் வாழ் மாணவச் செல்வங்களின் மீதான சபா அண்ணாவின் அன்பும் ஆதரவும் அளப்பரிய ஒன்றாக இறுதிவரை இருந்து வந்துள்ளது. காரைநகரில் செயற்படும் அனைத்து பாடசாலைகளின் வளர்சியிலும் எவ்வித பாகுபாடுகளுமற்ற நலத் திட்டங்களை செயற்படுத்திய கண்ணியத்திக்குரியவர் சபா அண்ணா. சபா அண்ணா கல்வி கற்றதும் முதன்மைமிக்க காரைநகர் கல்விச்சாலையுமான காரை இந்துக்கல்லூரியை மையமாகக் கொண்ட அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து வைத்தவர். அண்மையில் உருப்பெற்ற இந்த அறக்கட்டளை சபா அண்ணாவின் மாமனாரும், கல்லூரியின் சரித்திர முக்கியத்துவமுடைய அதிபரும், காரை மக்களின் அரசியல் தலைவராகவும் இருந்த அமரர் ஆ.தியாகராசாவின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆ.தியாகராசா அறிவியல் அறக்கட்டளை என்ற பெயரில் அமைந்த இத்திட்டமானது சபா அண்ணாவின் தனிப்பட்ட நிதியின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நலத்திட்டமாகும். இத்திட்டம் காரை மாணவர்களிற்கான புலமைப் பரிசில் நிதியை காலந்தோறும் வழங்கும் வகையில் நிரந்தர நிதி வைப்பீட்டைக் கொண்டதாகும். இற்றை வரையான காரை கல்வி நலத்திட்டங்களில் அளப்பரியதோர் திட்டத்தை உருவாக்கிய பொன்மனத்தின் சொந்தக்காரர் எங்கள் சபா அண்ணா.
புலம்பெயர் நாடுகளில் உள்ள காரை நலன்புரி அமைப்புக்களில் அறக்கட்டளை அமைப்பாக பதிவாகிய அமைப்பு, பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கமாகும். 2007 ஆம் ஆண்டு எமது சங்கத்தை ஓர் அறக்கட்டளை ஆக்கிய பெருமைக்குரியவர் சபா அண்ணா. காரைநகரில் அமைந்துவரும் காரை அபிவிருத்திச் சபை நூலகத்தின் உருவாக்கத்திற்கு ஆரம்ப காலம் முதல் பேருதவிகளை நல்கியவர். அண்மையில் மிகுந்த பெறுமதி மிக்க 32 தொகுதிகள் அடங்கிய கலைக்களஞ்சியத்தை அவர் நூலகத்திற்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
எழுத எழுத தொடரும் எல்லைகளுக்கு அப்பாலான அர்ப்பணிப்பாளன் எங்கள் சபா அண்ணா! தன் புலமை, கல்விப் பெருமை, சமூக மேன்நிலை ஆகிய அனைத்தையும் புறம்தள்ளி ஒர் அன்புமிக்க எளிய நண்பானாய் எம்மோடு ஊடாடிய ஓர் உயரிய மனிதனை இழந்து எம் சங்கம் வருந்துகிறது. அன்புடன் எம்மை அரவணைத்து வழிநடத்திய ஒரு மேய்ப்பனை நாம் இழந்திருக்கிறோம். ஒரு பிதா மகனை இழந்த பிள்ளைகளாக நாம் வருந்துகிறோம். விடைபெறும் சபா அண்ணாவை ‘பிதாமகன்’ என்றே போற்றி மனதிருத்தி, அன்னாரின் மறுவாழ்வின் ஆன்ம ஈடேற்றத்திற்காய் எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகா சமேத சுந்தரேஸ்வர பெருமானை வேண்டி! அன்னாரின் பிரிவால் துயருறும் காரை மக்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
பிரித்தானியா வாழ் காரை மக்கள் சார்பாக,
பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம்.
Funeral Arrangements Dr Sabapathy Sabaratnam
Dr Sabapathy Sabaratnam
06-11-45 – 21-03-2013
Viewings
Saturday 24th, 10.30am-12pm; Sunday 25th, 2pm-4pm; Monday 25th 6pm-8pm
MK Ginder & Sons
Watford Office & Chapel of Rest, 170 St Albans Rd, Watford, Herts, WD24 4AS
Funeral
Tuesday 26th March 2013
Religious Ceremony
12.30pm-2.30pm
Sun Sports & Social Club, Bellmount Wood Avenue, Watford, Herts, WD17 3BN
Cremation Service
3.20pm-3.50pm
West Herts Crematorium, High Elms Lane, Garston, Watford, Herts, WD25 0JS
Please join the family for a reception to celebrate Saba’s life
4pm-7pm
Sun Sports & Social Club, Bellmount Wood Avenue, Watford, Herts, WD17 3BN
NEW BOOKSHELVES TO YARLTON COLLEGE
Karai welfare Society (UK) donated £900 to purchase sixteen bookshelves to Yarlton college library.
பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் – காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி நூலகத்தினை புனரமைப்புச் செய்வதற்காக புதிய இறாக்கைகள் செய்வதற்கு ரூபா 188398/= ( £900) நன்கொடையாக மனமுவந்து உதவினர். இந்நிதியுதவியால் 16 புதிய இறாக்கைகள் செய்யப்பட்டுக் கல்லூரி நூலகம் புத்துயிர் பெற்றுள்ளது. இதற்காக பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்திற்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் கல்லூரிச் சமூகம் சார்பாகத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறார்.
GRADE 5, SCHOLARSHIP STUDENT REWARDED
கனடா காரை கலாச்சார மன்றம் லண்டன் காரை நலன்புரிச்சங்கம் ஆகியவற்றின் அனுசரணையுடன் மாணவர் கௌரவிப்புவிழா
கனடா காரை கலாசார மன்றம், இலண்டன் காரை நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 17 மாணவர்களுக்கும், தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றும் காரைநகர் மண்ணுக்கு பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா 26.12.2012 காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்றது. அப்படங்களை இங்கே காணலாம்
The Karai students who passed the year 5 scholarship examination were rewarded by the Karainagar Societies, in recognition of the achievement. This year seventeen students had obtained the pass marks.
The award ceremony was organised by the Karai Abiviruththi Sabai in conjunction with Canada Karai Cultural Association and Karai Welfare Society (UK). The award ceremony took place at J/ Yarlton College on the 26th Dec 2012.
Karai Welfare Society (UK) donated 50,000/= to this function.
Karai Kathambam 2013
பிருத்தானிய காரைநலன்புரிச்சங்கத்தின் பொங்கல்விழாவான “காரைக் கதம்பம் 2013 ” எதிர்வரும் வருடம் மாசி மாதம் 2 ம் திகதி சனிக்கிழமை (02 /02 /2013 ) மாலை 05 : ௦0 மணிக்கு PRESTON MANNOR HIGH SCHOOL, CARLTON AVENUEEAST, WEMBLEY, HA9 8NA இல் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்பும் அங்கத்தவர்களது பிள்ளைகள் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சி விண்ணப்பபடிவத்தை பூர்த்திசெய்து 10 /01/2013 இக்கு முன்னராக படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலாசத்திற்கு அனுப்பிவைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அங்கத்துவம் அற்றவர்கள் நிகழ்வில் பங்குபற்ற விரும்பும் பட்சத்தில், இணைக்கப்பட்டிருக்கும் அங்கத்துவ படிவத்தையும், ஒரு வருட அங்கத்துவசந்தாவான £60.௦௦ களுக்கான காசோலையோ அல்லது வங்கி மாதாந்த செலுத்துகை விண்ணப்பபடிவத்தையும் (மாதம் தலா 5.௦௦ விகிதம்) நிகழ்ச்சிக்கான விண்ணப்பபடிவத்தையும் பூர்த்தி செய்து மேல் குறிப்பிட்ட திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு நிர்வாகத்தினர் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றனர்.
மேலதிக தொடர்புகளுக்கு;
Kumar :- 07951 950843, Chithra:- 020 8342 0403, Manchula:- 078 2580 1801
நன்றி .
Educational Trust launched in Karainagar
Inaugural meeting of a “Dr A Thiagarajah Educational Trust” was held on Sunday 16 December 2012. The objective of this trust is to provide financial support to deserving students studying GCE (O/L) and GCE (A/L) in Karainagar Schools.
Scholarships will start will from January 2013 and run until December 2028. Annually a sum of Rs one million (Rs10 lakhs) will be available for students.
The following are appointed as Trustees
1. Mr Nadarajah Vijayakumar, – Chairperson
2. Mr Veluppilai Sabalingam – Secretary
3. Miss Vimalathevi Visuvanathan – Treasurer
4. Mrs Kamalambihai Ilangeswaran – Member
5. Mr Shanmugam Suhanthan – Member
6. Principal of Dr A Thiagarajah Madya Maha Vidyalayam - Ex-officio Member
7. Principal of Yarlton College - Ex-officio Member
Thank You
கலாநிதி ஆ.தியாகராஜா ஞாபகார்த்த கல்வி ஊக்குவிப்பு அறக்கட்டளை (நிதியம்)
காரைநகரில் கல்வி பயிலும் க.பொ.த.(சாதாரண தரம்), சக (உயர் தரம்) (G.C.E O/L AND A/L) ஆகிய மாணவ மாணவியர்களுக்கு அவர்களின் கல்வித் தேவைகளினதும் , தகமைகளினதும் அடிப்படையில் வருடா வருடம் நிதயுதவி வழங்கி ஊக்குவிப்பதற்காக, அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் ஞாபகார்த்தமாக இவ் அறக்கட்டளை அமைப்பு 16/12/2012 அன்று கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலய சயம்பு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
எதிர் வரும் வருடம் 2013, ஜனவரியில் இருந்து இவ் அறக்கட்டளை அமைப்பு உத்தியோகபூர்வமாக இயங்கவுள்ளது. இந்த நிதியம் வருடம் ஒன்றிற்கு ஒரு மில்லியன் ரூபாய்கள் வரை (1,000,000.00) இக் கல்விச் சேவைக்கென வழங்கவுள்ளது. தனிஒருவரால் வழங்கப்படும் இந்த நிதியுதவி, பிருத்தானிய காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன், இவ் அறக்கட்டளை இருப்பு கணக்கிற்கு வருடா வருடம் (2028 வரை) வழங்கப்படும்.
மேற்படி அமைப்பின் நிர்வாகக் குழு அங்கத்தவர்கள் விபரம் வருமாறு:-
1. தலைவர் :- திரு. நடராஜா விஜயகுமார்
2. செயலாளர் :- திரு.வேலுப்பிள்ளை சபாலிங்கம்
3. பொருளாளர் :- செல்வி.விமலாதேவி விஸ்வநாதன்
நிர்வாகசபை உறுப்பினர்கள் :-
1. திருமதி.கமலாம்பிகை இலங்கேஸ்வரன்
2. திரு.சண்முகம் சுகந்தன்
Ex-officio members
அதிபர்,யாழ்ற்ரன் கல்லூரி
அதிபர், கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயம்
நன்றி
Refurbishment works Completed at J/ Viyavil Saiva Vidyalayam, Karainagar
யா/வியாவில் சைவ வித்தியாலய திருத்த வேலைகள் முற்று.
மேற்படி பாடசாலைக்கு ஒரு சில திருத்த வேலைகளுக்கு அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ரூபாய் 109 950 .௦௦ பாடசாலை அபிவிருத்தி சபைக்கு கடந்த ஜூன் மாதம் அனுப்பிவைக்கப்பட்டு கீழ் காணும் அந்த திருத்த வேலைகள் துரிதமாக செய்து முடிக்கப்பட்டது. திருத்த வேலைகளாவன:-
**நீண்ட காலமாக பழுதடைந்திருந்த மலசல கூடம் திருத்தியது,
**பறவைகள் இடயுறுகளை தவிர்ப்பதற்காக மேல் சீட் அட்டித்தது,
**மீழ் வர்ண பூச்சு (Re paint )
பாடசாலை அதிபர் திரு கே. சுந்தரலிங்கம் அவர்கள் தனது நேரடி கண்காணிப்பின்கீழ் இவ் திருத்த வேலைகளை மிகவும் துரிதமாக செய்து முடித்தது மட்டுமல்லாமல், அவற்றிக்கான நன்றிக் கடிதத்தையும், பற்றுச்சீட்டையும் , படங்களையும் அனுப்பிவைத்ததையிட்டு பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் அதிபர் அவர்கட்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும் , நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கம்
The Annual General meeting of the Karai Welfare Society (UK)
பிருத்தானிய காரை நலன் நலன்புரிச் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் 2012
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் 2012 ம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம் (AGM ) இன்று HARROW COUNCIL CHAMBER HALL, STATION ROAD, HA1 2UX , எனும் இடத்தில அமைந்துள்ள மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. கடந்த வருடம் இருந்த நிர்வாகசபை ஒருசில மாற்றங்களுடன் மீண்டும் தெரிவு.
The Annual General meeting of the Karai Welfare Society (UK) was held on Sunday 21st October 2012, 3.00 PM at the HARROW COUNCIL CHAMBER HALL, Harrow and was chaired by the President Mr P. Thavarajah. It was attended by over fifty members and friends.
The meeting began with prayer and a minute silences for people who lost their life during the war in Sri Lanka. Following the event, the President welcomes the members and highlights current projects and future plans including republishing historical books and working together with fellow Karai Societies.
The Secretary read out KWS (UK)’s all activities during the past twelve months and followed by treasure report that was approved by the members. Treasure was also outlined the next year fund allocation and current fund commitments. Proposed fund allocation from the membership subscription are as follow; Emergency fund -10%, Education 50%, Health 10 %( plus charity money box collection) and water related projects.
During the question & answer session, members have raised number of questions and recommended valuable suggestion on KWS projects. The committee have responded to the quires and took on board their suggestions / opinions for consideration.
Mr Sathasivam Master explained to the audience that the current situation in Karainagar and the difficulties facing by the Karainagar people, schools and water supply issues.
The current Executive committee was re-elected for current year with minor changes in their role with few new trustees.
President Mr P. Thavarajah
Vice President Mr S. Konesalingham
Secretary Mr S.Sivapathasuntharam
Asst. Secretary Mr S. Manoharan
Treasurer Mr N Ravindran
Asst. Treasurer Mr P Gnanananthan
Other Trustees
Mr B Myooran
Mrs M Nadarajah
Mr V. Nadarajah
Mr K Parameswaran
Mr A. Pushparajah
Mr T Ragupathirajah
Mrs C Saravananthan
Mr K Sarvananthaligam
Mr E Thyanantha
Mr K Vigneswaran
Thanks.
Karai Welfare Society (UK)
ANNUAL GENERAL MEETING
Notice is hereby given that the Annual General Meeting of Karai Welfare Society ( UK) will be held on Sunday, 21st October 2012 at 2:30 at the following address;
Council Chamber Hall,
Harrow Council,
Civic Centre,
Station Road,
Harrow,
HA1 2UX
Agenda
1) Welcome speech – President
2 ) Annual Report – Secretary
3 ) Treasurer Report
4 ) Future projects and fund allocations
5 ) Question / Answer session
6) Election of New Committee
7) Election of Publication committee
8) Any other Business.
Thank You.
KWS ( UK)


























Recent Comments