அன்பான பிரித்தானியா வாழ் காரைநகர் மக்களே, 

 

எமது சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம்  17.10.2021 அன்று ZOOM செயலி மூலமாக சிறப்பே நடைபெற்றது. ZOOM நவீன தொழில்நுட்பம் செலவுகள் ஏதுமின்றி மிகவும் அமைதியான, கூச்சல் குழப்பம் இல்லாத, வினைத்திறனான கூட்டத்தை நடாத்துவதற்கு உதவி செய்துள்ளது. 

 

எமது சங்க விசேட பொதுக்கூட்டம், 25.09.2021 அன்று விடப்பட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, புதிய நிர்வாக தெரிவு, தீர்மானங்கள் நிறைவேற்றம் மற்றும் அங்கத்தவரிகளின் கேள்வி நேரம் என்பன சிறந்த முறையில் உரிய கட்டுப்பாட்டுடன் நடந்தேறின. இந்த விசேட பொதுக்கூட்டத்தில் 50 மேற்பட்ட அங்கத்தவர்கள் பங்குபற்றி தமது பூரண ஆதரவினையும் தந்திருந்தனர். 

 

தெரிவு செய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்கள் (அறங்காவலர்கள்) விபரங்கள் பின்வருமாறு.

 

பொறுப்பு  அறங்காவலர்  
அவைத்தலைவர் (Chair)

திரு தில்லைநடராஜா சண்முகநாதன்  

துணை அவைத்தலைவர் (Vice chair)

திரு விநாசித்தம்பி நாகேந்திரம்   

செயலாளர் (Secretary) 

திரு பரமநாதர் தவராஜா                                      

துணை செயலாளர் (Asst. Secretary)

திரு ஜீவகாந்தன் நடராஜா

பொருளாளர் (Treasurer) 

திரு தர்சன் இராஜேந்திரன் 

துணை பொருளாளர் (Asst. Treasurer)

திரு பொன்னையா ஞானாநந்தன் 

நிர்வாக உறுப்பினர் 01

திரு ராஜநாயகம் சுந்தரதாசன் 

நிர்வாக உறுப்பினர் 02

திரு தம்பிராஜா தேவனாந்தம் 

நிர்வாக உறுப்பினர் 03

திரு ராஜசேகரம் சிவனேஸ்வரன் 

நிர்வாக உறுப்பினர் 04

திரு அம்பிகைபாகன் சிவபாதசுந்தரம்  

நிர்வாக உறுப்பினர் 05

திரு கந்தசாமி பாலகிருஷ்ணன் 

நிர்வாக உறுப்பினர் 06 திரு சிவசுப்ரமணியம் கோணேசலிங்கம் 

தங்களுடைய ஒத்துழைப்பிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதோடு தங்களது ஒத்துழைப்பினை மென்மேலும் எதிர்பார்க்கிறோம். 

நன்றி 

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்