பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கத்தின் பொங்கல் விழாவான ‘காரைக் கதம்பம் 2020’ கடந்த 22.02.2020 அன்று மாலை மண்டபம் நிறைந்த மக்களுடன் இனிதே நிறைவேறியது.


விழா மாலை 05:௦௦ மணிக்கு ஆரம்பமானது. விழாவிற்கு வருகை தந்திருந்த  திருமதி கமலாம்பிகை நடராஜா மற்றும் திருமதி சுபாசினி யோகராசா ஆகியோர் மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர்.


தொடர்ந்து இளையோர் வழங்கிய இனிய தேவாரத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. சங்கத்தின் செயலாளர் திரு ஜீவன் நடராஜா வழங்கிய வரவேற்புரையை தொடர்ந்து சிறுவர் நிகழ்சிகள் ஆரம்பமானது. 


பரத நாட்டியம், இசைக் கச்சேரி, நாடகம், சினிமா நடனம், பேச்சு என்று பல இனிய நிகழ்வுகளை சிறுவர், சிறுமியர் மேடையேற்றினர்.


நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. தேவராயன் செல்லையா அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 

பிரதம விருந்தினர்  திரு. தேவராயன் செல்லையா அவர்கள் தமது உரையில் காரை மண்ணின் பெருமைகளை எடுத்து இயம்பி, மேலும் காரை மக்கள் ஒற்றுமையாக  மேலும் காரை மண்ணை மேம்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


பிரித்தானிய நலன் புரிச்சங்கத் தலைவர் திரு. முருகேசு யோகராஜா தலைமையுரை ஆற்றும்போது, காரை மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி, காரைமக்களை காரை மண்ணை மேலும் முன்னேற்ற ஒற்றுமையுடன் கூடுமாறு அழைப்பு விடுத்தார். 


காரை நலன்புரிச்சங்கம் “சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவதால், சமூக அமைப்புகளுக்கு பாதிப்பா?” எனும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை நடாத்தி இருந்தது.


தொடர்ந்து விழாவில் பங்குபற்றிய சிறார்களும், விழா அனுசரணையாளர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.


சங்கத்தின்  விழா பொருளார் திரு தர்சன் இராஜேந்திரன் வழங்கிய  நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது. அதன் பின்னர் மக்கள் அனைவரும் இராப்போசன விருந்தில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.  


நன்றி 

 

நிர்வாகம்
பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம்